×

வியாசர்பாடியில் சிறுவனுக்கு கத்திவெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடியில் சிறுவனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய 5 பேரை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 31வது தெருவை சேர்ந்தவர் ரகுமான். இவரது மகன் பிரஜன் (17). இவர் 10ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டின் அருகே நின்றபோது திடீரென அங்கு வந்த 5 பேர், பிரஜனை சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்த சிறுவனை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவனுக்கு தலையில் 22 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.இதுபற்றி எம்கேபி. நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரஜன், அவரது வீட்டின் வழியாக பைக்கில் செல்லும்போது அதிவேகமாக சென்றதும் அப்போது விக்கி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதும் இதனால் விக்கி தனது நண்பர்களை அழைத்துவந்து சிறுவன் பிரஜனை சரமாரியாக வெட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post வியாசர்பாடியில் சிறுவனுக்கு கத்திவெட்டு appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Perambur ,Raghuman ,31st Street, Vyasarpadi PV Colony, Chennai ,Prajan ,
× RELATED ‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால்...